இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் பணியாளர் கார்னியர் பானிஸ்டர் பிரான்சிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதை சுவிஸ் மத்திய வெளியுறவுத் துறை இன்று வரவேற்றுள்ளது.
சுவிஸ் மத்திய வெளியுறவுத் துறை இன்று வெளியிட்டுள்ள ருவிட்டர் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் பணியாளர் கார்னியர் பானிஸ்டர் பிரான்சிஸ் காசுப் பிணையில் நேற்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டார்.
கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சோடிக்கப்பட்ட தகவல்களை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு டிசம்பர் 16 ஆம் திகதி சுவிஸ் தூதரகத்தின் பணியாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.